பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை மாகர சபையின் கீழ் உள்ள மருதமுனை பிரதேசத்தில் பல இடங்களில் தெரு விளக்குகள்
எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை
எதிர்நோக்கிவருகின்றனர்.
இரவு நேரங்களில் உலாவுகின்ற திருடர்களுக்கு இந்த இருள் சூழ்ந்த இடங்கள் சாதகமா
அமைந்துள்ளது.பெண்கள்ரூபவ்வயது முதிர்ந்தவர்கள்ரூபவ்சிறுவர்கள் இதனால் பெரும்
பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விடையம் தொடர்பாக ஊடகவியலாளர் என்ற வகையில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர்
ஜே.லியாகத் அலியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்த போதலிலும் இதுவரை
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற எந்த விடையமாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து
அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது எனவே இந்த
விடையத்தை உடனடியாகத் தீர்த்து வைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.