பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் அனுசரணையுடன்; மருதமுனை எஸ்.பி.பவுண்டேசன் ஏற்பாடு செய்துள்ள மர்ஹூம் எச.;எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017 கிரிக்கட் சுற்றுப் போட்டி இன்று(23-09-2017)சனிக்கிழமை காலை மருதமுனை மசூர்மௌலான விளையாட்டுத் தொகுதியில் ஆரம்பமாகின்றது.
அணிக்குப் 11பேர் பங்கு கொள்ளும் 10 ஓவர் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மருதமுனையைச் சேர்ந்த 14 கழகங்கள் பங்குகொள்கின்றன இச் சுற்றுப் போட்டிக்கான நிரல் படுத்தல் நிகழ்வு மருதமுனை எஸ்.பி.பவுண்டேசனின் பொதுச் செயலாளர் என்.எம்.அனீஸ் அஹமட் தலைமையில் புதன்கிழமை இரவு(20-09-2017)மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலை மண்டபத்தில்; நடைபெற்றது.