வேன் விபத்து - மூவர் படுங்காயம்...




க.கிஷாந்தன்-

நுவரெலியாவிலிருந்து கெப்பட்டிபொல வழியாக அப்புத்தளை இதல்கஸ்ஹின்ன போகஹகும்புர நோக்கி பயணித்த வேன் ஒன்று நுவரெலியா அப்புத்தளை பிரதான வீதியில் போகஹகும்புர வெளியராகம பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மங்கள வீடு ஒன்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும் வழியிலேயே குறித்த வேன் 10.09.2017 அன்று இரவு 11.30 மணியளவில் பாதையை விட்டு விலகி மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் வேன் சாரதி உட்பட மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வேன் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த மூவர் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பில் போகஹகும்புர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -