யு.எல்.எம். றியாஸ் -
அம்பாறை மாவடடத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைதிடல்களிலும் பள்ளிவாசல்களிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
புத்தாடை அணிந்து ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்கள் ,திடல்களில் பெருநாள்தொழுகைக்காக வருகை தந்திருந்தனர்.
சம்மாந்துறையிலும் திடல்களிலும் பள்ளிவாசல்களிலும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லீம் மகளிர் கல்லூரி திறந்த வெளியில் ஏற்பாடுசெய்யப்படட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று காலை இடம்பெற்றது
பெருநாள் தொழுகையினையும் குத்பா பிரசாங்கத்தையும் மௌலவி ஏ.எல். இப்ராஹிம் மதனி நிகழ்த்தினார்
இதன்போது உலகளாவிய முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும் விசேட துவாய்பிராத்தனையும் இடம்பெற்றது இதில் பெருமளவிலான ஆண்களும் ,பெண்களும்கலந்துகொண்டனர்