என்ன குற்றம் செய்தோம் குருதியை குடிக்கின்றார்களே..!

ழலை மொழியும் அர்த்தமாய் பேசத்தெரியாத பச்சிளம் குழந்தைகள் அலையில் அல்லுண்டு போகிறது ஜடமாய்..

உறவுகளோடு சேர்ந்து அழுவது கூட உறுதி இல்லாத தேசம்..

ஆட்சியாளும் அரக்கனுக்கு அமைதிக்கான நோபல் பரிசில்கள்
அப்பாவி மக்களுக்கோ நோவினை தரும் மரணங்கள்..

மிருகமேனும் மென்று உண்ணும்..
என் தேசத்து மனித மிருகங்கள் கொன்று உண்ணும்..

என்ன தவறு செய்தோம்.
அடி நெஞ்சில் அல்லாஹ்வை சுமந்தோம்..
இஸ்லாத்தை இதயத்தில் சுமந்தோம்..
கலிமாவை நாவில் சுமந்தோம்..
அதற்காக கொன்று குவிக்கிறார்கள்..

எங்கள் அடையாளத்தை அழிக்கட்டும்..
எங்கள் உயிரை குடிகட்டும்..
உடலை எரித்து குளிர்காயட்டும்..

இஸ்லாத்தை துறக்கமாட்டோம்..
ஈமானை இழக்கமாட்டோம்..

நாங்களும் ஷஹிதுகளான
சுவனத்து பூக்கள்..


காத்தவூர்க்கவி
ஜுனைட்.எம்.பஹ்த்.
காத்தான்குடி.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -