தேர்தல் காலத்தில் இடத்திற்கு ஏற்ப ரஞ்சன் ராமனாயக்க மதத்தை மாற்றிக்கொள்வார்..

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தது போன்று மகாநாயக்கர்களை அவமதித்துப் பேசிய பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏன் அதிகாரம் இல்லாதிருப்பதாக முன்னாள் அமைச்சரும் மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணாந்தோ தெரிவித்தார்.

வாரியபொலவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது ,,

ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு சமயம் என்று ஒன்று இல்லை.இரத்னபுரியில் தேர்தலில் போட்டியிடும் போது தான் ஒரு பௌத்தர் என்றார்.அதேபோன்று கம்பஹாவில் போட்டியிடும் போது தான் ஒரு கத்தோலிக்கர் எனக் கூறிக் கொண்டார்.தேர்தல் காலங்களில் ஏரியாக்களுக்கு ஏற்றால் போல் அவர் மதத்தை மாற்றிக்கொள்வார்.

ஜனாதிபதியும் பிரதமரும் அறிந்த நிலையிலேயே தான் ரஞ்ஜன் ராமநாயக்க மகாநாயக்கர்களுக்கு ஏச்சுப் பேச்சில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -