பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 20 வருட அரசியல் வாழ்வின் பூர்த்த்தியை முன்னிட்டுஇடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,!
நாட்டுக்கு பொருத்தம் இல்லாத கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டுவந்து நாட்டின் இறைமையைஅழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போட்டு தமது ஆட்சியை தக்கவைக்கை முயற்சித்துவருகின்றனர்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்போட தயாராக இல்லையாம். எனினும் பெண்களின் அரசியல்பலத்தை பெருக்கவே தேர்தல்கள் தாமதமாகின்றது என்றும் அரசாங்கம் கூறுகின்றது.
நாம் உருவாக்கிய இந்த நாட்டின் அமைதியும் ஜனநாயகமும் இன்று அழிக்கப்பட்டு மோசமான திசையில் நாடுபயணித்து வருகின்றது. மேலும் இந்த நாட்டுக்கு ஏற்கப்படாத பல சட்டங்கள், கொள்கைகள் இந்த ஆட்சியில்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது இந்த நாட்டை ஆதரிக்கும், நேசிக்கும் எம்மால் ஒருபோதும்ஏற்றுகொள்ளமுடியாது உள்ளது என குறிப்பிட்டார்.