மாகாண சபை­க­ளுக்­கான புதிய சட்­ட­மூ­லம் நாளை சமர்ப்பிக்கப்படும்..


மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை ஒரே முறையில் நடத்­து­வ­தற்கு ஏற்ற வகையில் 20ஆவது திருத்­தத்­திற்கு பதி ­லாக புதி­ய­தொரு சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

20ஆவது திருத்த சட்­ட­மூலம் தொடர்­பான உயர் நீதி­மன்­றத்தில் தீர்­மானம் ஜனா­தி­ப­திக்கும் சபா­நா­ய­க­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் சப­நா­யகர் இன்று அறி­விக்­க­வுள்ளார். ஆனாலும் 20ஆவது திருத்­தத்­திற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்று உயர் நீதி­மன்றம் பரிந்­துரை செய்­துள்­ள­தாக தெரி­கின்­றது.

இத­னை­ய­டுத்தே 20ஆவது திருத்­தத்தை கைவிட்டு அதற்கு பதி­லாக புதி­ய­தொரு சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் நாளை 20ஆம் திகதி சமர்ப்­பிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இது தொடர்­பான சட்­ட­மூலம் அவ­சர அவ­ச­ர­மாக தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஆளுங்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­க­ளது கூட்டம் இடம்­பெற்­றது. இந்தக் கூட்­டத்­தின்­போது 20ஆவது திருத்­தத்­திற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை உயர் நீதி­மன்றம் கோரி­யுள்­ள­மை­யினால் அதற்கு பதி­லாக புதி­ய­தொரு சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­பது குறித்து ஆரா­யப்­பட்டு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சட்­ட­மூ­லத்தை நாளைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து விவாதம் நடத்­து­வது என்றும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

கிழக்கு, சப்­ர­க­முவ, வட மத்­திய மாகாண சபை­களின் பத­விக்­காலம் இம்­மாதம் இறு­தியில் முடி­வ­டை­கின்­றது. எனவே இந்த மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை ஒத்தி வைக்க வேண்­டு­மானால் அர­சி­ய­மைப்பில் திருத்­தத்தை கொண்டு வரு­வது அவ­சி­ய­மா­கின்­றது. 20ஆவது திருத்­தத்­தினை கொண்டு வரு­வ­தற்கு அர­சாங்கம் முயன்ற போதிலும் அதற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டதை அடுத்து அது தொடர்­பான தீர்­மா­னத்தை உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்­ளது.

இந்த நிலை­யி­லேயே புதிய சட்­ட­மூ­லத்தை கொண்டு வந்து மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­களை ஒரே தட­வையில் நடத்­து­வ­தற்கு தற்­போது அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றது. அர­சியல் யாப்பில் திருத்தம் செய்­யப்­ப­டா­விடின் பதவிக் காலம் முடி­வ­டையும் மூன்று மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­களை டிசம்பர் மாதம் 09ஆம் திகதி நடத்த வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மா­கவே 20ஆவது திருத்­தத்­திற்கு பதி­லாக புதிய சட்­ட­மூ­லத்தை கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று நடைபெற்ற ஆளுங்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கேட்டபோது,

மாகாண சபை தேர்தல்களை ஒரே முறையில் நடத்தும் வகையில் 20ஆவது திருத்தத்திற்கு பதிலாக புதிய சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வீ

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -