**கோபுரம் சரியில்லையென்று சில
குப்பை மேடுகள் குறை கூறுகின்றன.....
**செங்கோல் பங்கமென்று சில
செருப்புகள் பறைசாற்றுகின்றன.....
**மலர் நாறுகிறதென்று சில
மலக்குழிகள் புகார் கொடுக்கின்றன.
**ஆற்று நீர் அசுத்தமென்று சில
சாக்கடைகள் சத்தியம் செய்கின்றன.
**வண்ண மயிலின் பேரழகைச் சில
வான்கோழிகள் வசைபாடுகின்றன....
**பௌர்ணமி நிலவைப் பார்த்துச் சில
சொறி நாய்கள் ஊளையிடுகின்றன.....
**புலியைச் சில
புழுக்கள் குறை சொல்கின்றன....
**சிங்கத்தைச் சில
சிறுநரிகள் குற்றமென்கின்றன.....
**வெள்ளை மனம் கொண்டவரைச் சில
கொள்ளைக்காரர்கள் கூண்டிலேற்ற முனைகின்றார்கள்....
**ஏழைகளின் தோழனைச் சில
ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லாமலாக்கப் பார்க்கிறார்கள்....
**ஊரைச் சுருட்டி உலையில் போட்டவர்கள் ஓர்
உத்தமரை ஊழல்வாதி என்கிறார்கள்....
**காசுக்கு மோசம் போனவர்கள்
ஒரு கடமை வீரனைக்
காட்டிக் கொடுக்கக் கங்கணம் கட்டியிருக்கிறார்கள்....
**கேட்ட பணம் கிடைக்காது போனதால்
கெட்டவரென அந்த நல்லவரைச் சில
கேடுகெட்டவர்கள் சொல்கிறார்கள்...
**தர்மத்தைச் சூது கவ்வும்...இறுதியில்
தர்மமே வெல்லும்!
**நேர்மைமிகு அமைச்சர் ரிசாத்
நிச்சயம் வெல்வார்!!
**இன்ஷா அல்லாஹ்!!!