பறந்துபோயிற்று கவிக்குயில்...!

பறந்துபோயிற்று கவிக்குயில்....
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

இதுவரை ஆழ்மனதில் பதிந்திருந்த 
அந்தக்குரலின் இனிமையை
இனியும் எப்படிக்கேட்பேன் !
அகரம் கற்கவேண்டிய 
ஐந்தாவது வயதில் 
சுயமாய் கவிகோர்த்த கவிக்குயிலே !

என் எட்டாவது வயதில் 
எம்மூர்மேடையில் 
முதலாவது அரங்கேற்றம்
நடைபெற்றதாமே !
அன்றுஆரம்பித்த கவிப்பயணம் 
இன்றோடு முடிந்து விட்டதா தாயே !

பிறர்க்கில்லை 
பிள்ளை என்பார் கவியால்
தாயே பெரும் துயராய்
வரம்கேட்டாய் !

பிரிந்திருந்தால் குடும்பத்தை 
கவியால் பேசவைத்துச்
சேர்த்து வைத்தாய் !

வாடிய குமர்களுக்காய்
வரன்வேண்டிக்
கவிபடித்தாய் !

அழும் குழந்தையையே
அழவதைப்போல் தாலாட்டி
இளய மனசுகளை
ஈர்த்து விட்ட என்தாயே............ !

கேட்டவுடனே நெக்கி 
கிறுகிறுத்தாப் போலருந்து
பாஞ்சுழுந்து வந்தோம் - நானும்
பாலமுனை பாறூக்கும்

ஊட்டடிக்கி வந்தேனும்மா
ஒங்குட முகம் பாப்பமெண்டு செல்லி
பாக்க முறையில்லாம _ நாங்க 
பரிதவிச்சி நிண்டோங்கம்மா.. !

அசறால தாண்டி ஒங்கள
அடக்குறதாம் எண்டாங்க
கிறுக மனமில்லாமல் - நாங்க 
கிளம்பி வந்தோம் உம்மாண்டே !

அவட பாவம் பொறுத்தருள
படச்சவனைக் கையேந்தி 
கேளுங்க மக்காள் - செய்தி 
கெடச்சவங்க எல்லாரும் !

₹₹₹₹₹₹₹

உயர் சுவர்ககம் பெற்று 
உவப்பாக வாழ வல்ல
இறைவனை 
பிரார்த்திப்போமாக....
ஆமீன்!

எழுகவி ஜெலீல்,
அக்கரைப்பற்று. 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -