ஏறாவூர் பொலிஸ் பிரிவு, வந்தாறுமூலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை திங்கட்கிழமை 18.09.2017 மாலை மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் ஸ்ரீதர் (வயது 55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி சடலம் அவரது வீட்டின் வழிபாட்டு அறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவர் மதுபோதையில் இருந்த நிலையில் வழிபாட்டறையைத் தாழிட்டுக் கொண்டு நெடு நேரமாக வெளியே வராமல் இருந்ததையடுத்து தாங்கள் அயலவர்களின் உதவியுடன் தாழிடப்பட்டிருந்த அறையின் ஜன்னல்களை உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்தபோது அவர் சடலமாகக் காணப்பட்டதாகவும் உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.