எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு ' மாறுவோம் மாற்றுவோம் ' எனும் கருப்பொருளின் கீழ் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தலைமையயில் (17) நேற்று கல்லூரியின் ஆதாரணை மண்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச். பண்டார, வவுனியா தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி கே.சிதம்பரம், மட்டகளப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜந்திரன், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.சுபையிர், உபபீடாதிபதிகள், இணைப்பாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், ஓய்வு பெற்ற கல்விசார், கல்விசாரா ஊழியர்களும் ஏனைய அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.