ராஜபக்‌ஷ குடும்பத்தை சிறையில் அடைத்தாவது புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முயற்சி

ராஜபக்ஸ குடும்பத்தை சிறையில் அடைத்தாவது,இலங்கை அரசியலமைப்பில்மாற்றத்தை கொண்டு வந்து இலங்கை நாட்டை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லசிலர் முயற்சிப்பாதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸதெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.....

இலங்கை கலாச்சாரத்தை மதித்து நடக்காத வெளிநாட்டு சக்திகளுக்கி பின்னால் உள்ளசிலரே புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து நாட்டை அழிவுக்கு கொண்டு செல்லமுயற்சிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன நல்லுறவை மேம்படுத்த பல்வேறுதிட்டங்களை முன்னெடுத்தார்.கைது செய்யப்பட்ட 12000 விடுதலைப் புலிகளுக்கு புணர்வாழ்வளித்தார். இந்த எண்ணிக்கை சாதாரணமான எண்ணிக்கையல்ல. இதிலேயே அவர்இன நல்லுறவை மேம்படுத்த எந்தளவு அக்கறைருடன் செயற்பட்டுள்ளார் என்பதைஇன்று இன நல்லுறவை பற்றி பேசுபவர்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த அரசாங்கமானது இலங்கை அரசியலமைப்பை இன நல்லுறவைமேம்படுத்தப்போகிறோம் என கூறிக்கொண்டு இலங்கை நாட்டை அணுவணுவாகசிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இன நல்லுறவை கட்டியெழுப்ப எத்தனையோ விடயங்கள் உள்ள போது எடுத்த எடுப்பில்அரசியலமைப்பில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டுமா?

இன நல்லுறவை மேம்படுத்த இவ்வரசு வேறு என்ன செய்துள்ளது. இவர்களுக்கு தாய்நாட்டின் மீது சிறிதளவும் அக்கறை இல்லை.இல்லாவிட்டால் இலங்கை நாட்டின்வளங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பார்களா?

இலங்கை நாட்டின் அரசியலமைப்பை கொண்டுவருபவர்கள், இலங்கை நாட்டின்கலாச்சாரத்தையோ அல்லது இங்குள்ள மதங்களையோ பின்பற்றுபவர்களல்ல.இவர்களுக்கு இலங்கை நாட்டின் மீது பற்று இருக்காது. இவர்களின் சில்லறைவிளையாட்டை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மிகக் கடுமையானபோராட்டங்களை முன்னெடுக்கவும் தயாராகவுள்ளோம்.இது அவர்களுக்கும் தெரியும்.

இவ்வரசு, முழு ராஜபக்ஸ குடும்பத்தினரையே சிறையில் அடைத்தாவது தங்களதுவிடயங்களை சாதிக்கும் நிலையில் உள்ளது. எங்களை கைது செய்தாலும் எங்களதுஉறவுகளான இலங்கை மக்கள் இவ்வரசுக்கெதிரான போராட்டங்களைமுன்னெடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -