பாறுக் ஷிஹான்-
யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று(14) வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரின் போராட்ட இடத்தில் வைத்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் யாழ். இந்துக்கல்லூரியில் தமிழ் மொழித்தினவிழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவும்இ தமது கோரிக்கைகளை முன்வைத்தும் குறித்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.