அல்ஆலிய்யா சான்றுகள் வழங்கும் நிகழ்வும் பல்கலைக்கழகம் நுழையவிருக்கும் மாணவர்களை கௌரவித்தலும்




ஹஸ்பர் ஏ ஹலீம்-
மூதூர் நத்வதுல் உலமா அரபுக்கல்லூரியில் 2017 ஆம் ஆண்டுக்கான அல்ஆலிய்யா ஷஹாதா பட்டம் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வொன்று இன்று-(22 ) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது இவ்வாண்டுக்கான கற்கை நெறியினை நிறைவு செய்து அஷ்ஷஹாதா பட்டம் பெரும் 08 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் 06 மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைவதற்கான வாய்ப்பையும் பெற்று கௌரவிக்கப்பட்ட நிலையில் 2015 ஆண்டு பல்கலைக்கழகம் தெரவான 03 மாணவர்களும் 2016 ஆம் ஆண்டு தெரிவான 04 மாணவர்களும் உள்ளடங்களாக கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது பிரதான விருந்தினராக கல்லூரி அதிபர் அஷ்ஷைஹ் எம்.எம்.கரீம்(நத்வி) அவர்கள் கலந்துகொண்டதோடு அதன் நிருவாகிகள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -