பி.கேதீஸ்-
நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட டிரேட்டன் கிராம சேவகர் பிரிவில் உள்ள டெரிக்கிளையார் தோட்ட கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு மற்றும் கலை நிகழ்வுகளும் டெரிக்கிளயர் தமிழ் வித்தியாலய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு நுவரெலியா பிரதேச செயலக கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நயினாமலை முரளிதரன் வழிக்காட்டலுக்கமைய முதியோர்களுக்கு குடைகளும் டெரிக்கிளயர் தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச செயலக கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நயினாமலை முரளிதரன், டிரேட்டன் கிராம உத்தியோகத்தர் திரு.இராமநாதன், டெரிக்கிளயர் கிராமிய அபிவிருத்தி சங்க தலைவர் இராமகிருஸ்ணன் , செயலாளர் நித்தியகலா , பொருளாளர் அருளாந்து, டெரிக்கிளயர் பாடசாலை அதிபர், பெற்றோர்கள்,மற்றும் மாணவர்கள் உட்பட கலந்துகொண்ட மக்களின் ஒரு பிரிவினரையும் இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -