ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மீண்டும் ஒரு இரட்டைக்கொலை தாயும் மகனும்.


முஹம்மட் நசீர்-

26
வயது தாயும், 11 வயது மகனும் படுக்கையறையில் அடித்து கொலை.

முருகன் கோவில் வீதி, சவுக்கடி, தன்னாமுனையை சேர்ந்த மதுவந்தி என்ற தாயும். மதுஷன் என்ற மகனுமே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.


குடும்பத் தலைவனான கணபதிப்பிள்ளை பீதாம்பரம் என்பவர் மத்தியகிழக்கு நாடொன்றில் எட்டு வருடமாக தொழில் செய்து வருகிறார்.
எதிர்வரும் டிசம்பரில் நாடு திரும்ப இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருந்த இவர்களை இரவுத் தூக்கத்திலிருக்கும் போது, கூரை ஓட்டை அகற்றி கயிறொன்றில் வீட்டுக்குள் இறங்கியே இப் படுகொலை நடந்துள்ளது.

நேற்று பிற்பகல் தனது சகோதரியின் நகையொன்றை செங்கலடி நகைக்கடையொன்றில் ஈடுவைத்து விட்டு 60000/= பெற்றுவந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டதோடு, அடிக்கடி கூடிய நகைககளை அணிந்துதான் வெளியில் சென்று வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை 09.00 மணியளவில் இவரது வீட்டு வளவினுல் மாடு மேய்வதைக் கண்ட அருகாமையில் வசிக்கும் சகோதரியின் மகள், மாட்டை துரத்திவிட்டு, திறந்திருந்த வீட்டினுல் சென்று சித்தியை அழைத்த போதுதான் சித்தியும், சித்தியின் ஒரேயொரு மகனும் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதைக் அவதானித்து அலரிக்கொண்டு ஓடி வந்துள்ளார்.

கிராமே சேவை அலுவலருக்கும், ஏறாவூர் பொலிசாருக்கும் விடயத்தை உறவினர்கள் தெரிவித்ததால்,
மேலதிக நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுக்கின்றர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -