முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்-
சர்வதேச சுனாமி தினத்தினை முன்னிட்டு இன்று 2017-11-05 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சுனாமி கோபுரங்களை அண்மித்த பிரதேசங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வானது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
மேலும் சுனாமி எச்சரிக்கை கோபுரத்தில் இருந்து ஒலிக்கப்படும் விழிப்புணர்வுஎச்சரிக்கை ஒலிச்சத்தத்தைக் கேட்டதும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்வதற்கான விழிப்புணர் பயிற்சி நிந்தவூர் கமு-அல்-அதான் வித்தியாலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு ஒத்துளைப்பு வளங்கிய அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விசேட அதிரடி படையினர், கடற்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நிந்தவூர் விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு நிகழ்வு சிறப்பாய் நிறைவுபெற்றது.