முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா புதிய அரசியல் கட்சியில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா புதிய அரசியல் கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார். கடந்த காலங்களில், ஊடகம் மற்றும் ஏனைய சில துறையினருடன் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவர் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து சில நாட்களாக மௌனம் காத்து வந்த அவர், தற்போது புதிய கட்சியொன்றின் மூலம் மீளியங்க முடிவுசெய்துள்ளார்.

தமது கட்சிக்கு ‘தேசிய ஜனதா பக்சய’ எனப் பெயரிட்டுள்ள அவர், நாரஹேன்பிட்டியில் உள்ள தமது இல்லத்தில் வைத்து இந்தக் கட்சியை ஆரம்பித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -