கேரள கஞ்சாவை வைத்திருந்த கலால் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனையைச் சேர்ந்த இந்த 25 வயது இளம் அதிகாரி வவுனியா கலால் திணைக்களத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மட்டக்களப்பு போதை மருந்து தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் நேற்று இந்த அதிகாரியிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அவரிடம் சுமார் 750 கிராம் கேரள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தப்படவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -