சவுக்கடி இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது





  முர்சித் வாழைச்சேனை-

ட்டக்களப்பு சவுக்கடி ,ரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கக் கோரியும், அவர்களுக்கு ஒருபோதும் பிணை வழங்குதல் கூடாது எனவும், அவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்து ,ன்றைய தினம் ஆறுமுகத்தான் குடியிருப்பு, சவுக்கடி பிரதேச பொது மக்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்துறையே கொலையாளிகளுக்குத் தண்டனை வழங்கு, சட்டத்தரணிகளே கொலையாளிகள் சார்பில் ஆஜராக வேண்டாம், நீதி தேவதையே கண்விழி, காவற்துறையே கொலையாளிகளைப் பிடித்ததது போல் அவர்களுக்கு விரைவாகத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க மேலும் உதவுங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி பிரதேசத்தில் கடந்த மாதம் 18ம் திகதி தாய் மற்றும் மகன் ,ருவர் கொலை செய்யப்பட்டு வீட்டில் ,ருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ,ருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -