களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சிக் காலம் ஒரு பொற்காலம்என்பதை இவ்வரசு காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதில் ஒன்று தான் இலங்கையில் நிலவிக்கொண்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடாகும்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சிக் காலமான யுத்தம் நிலவியசந்தர்ப்பத்தில் கூட எரி பொருள் தட்டுப்பாடு நிலவிய சரித்திரமில்லை. அப்படித் தான்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சி அமைந்திருந்தது.
இன்று இலங்கை நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. யாரும் வேலைநிறுத்தம் செய்யவில்லை. இப்படியான எரிபொருள் தட்டுப்பாடு எதனால் ஏற்பட்டதுஎன்ற காரணத்தை கூட வெளியில் கூறாமல் இவ்வரசு மறைக்கின்றது. அதற்கானகாரணத்தை வெளியில் கூறினால் மக்கள் தங்களது ஆட்சியை பார்த்து சிரித்துவிடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை.
சில நாட்களாக இவ் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற போதும் இவ்வரசு அவசரமாகஎந்த நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. எரிபொருள் தட்டுப்பாடு நிலவினால் நாடேஒரு கனம் ஸ்தம்பித்துவிடும். தற்போது இலங்கை நாடு அரை ஸ்தம்பித நிலைக்குவந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கனமும் பல கோடி பொருளாதார இழப்புக்கள்ஏற்படும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் இவ்வரசானது அக்கறையற்றவிதத்தில் செயற்படுவதானது இலங்கை நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தும்வகையில் அமைந்துள்ளது. இது இவ்வரசின் ஆட்சிக் குறைபாடின்றி வேறு ஏதுமில்லை.