ஓட்டமாவடி பிரதேச செயலகம் மின்சாரம் இன்மையால் ஸ்தம்பிதம்



வாழைச்சேனை முர்சித்-

ட்டமாவடி பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை மின்சாரம் தடைப்பட்டுள்ளமை காரணமாக தங்களுடைய சேவையைப் பெற்றுக் கொள்வதில் பிரதேச மக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மின்சாரம் இல்லாத நேரத்தில் பயன்படுத்துவதற்கு மின்பிறப்பாக்கி இல்லாத காரணத்தால் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் பிரதேச செயலக அதிகாரிகள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

பிரதேச செயலகத்திற்கு இறப்பு பிறப்பு பதிவு, வாகன அனுமதிப் பத்திரம், போன்றவற்றை பெறுவதற்காக வருகை தந்த மக்கள் மின்சாரம் இன்றியும், மின்பிறப்பாக்கி இல்லாத காரணத்தினாலும் தங்களுடைய சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு மின்பிறப்பாக்கி ஒன்றை வழங்குவதன் மூலம் இப்பிரதேச மக்களின் நேரம் மற்றும் பொருளாதாரத்தை வீணடிக்காமல் சேவையை வழங்க முடியும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -