தொலைபேசி கம்பத்தினை உடைத்து கொண்டு வனராஜா பகுதிக்குள் பாய்ந்த லொறி




க.கிஷாந்தன்-

ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா வனராஜா பகுதியில் 11.11.2017 அன்று பகல் 1.30 மணியளவில் லொறியொன்று தொலைபேசி கம்பத்தினை உடைத்து கொண்டு விபத்துக்குள்ளாகியதாக அட்டன் பொலஸார் தெரிவித்தனர்.

அட்டனிலிருந்து நோர்வூட் நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரதேசங்களுக்கு தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இவ்விபத்து ஏற்படும் போது லொறியில் சாரதியும் மற்றுமொருவரும் இருந்துள்ளதாகவும் தெய்வாதினமாக எவருக்கும் எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.

லொறியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் செய்த ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -