வலிகாமம் வடக்கில் அமைதிப் பேரணி





பாறுக் ஷிஹான்-

லிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று (5) காலை அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

இப்பேரணி வசாவிளான் கிராம முன்னேற்றச் சங்க முன்றிலிலிருந்து ஆரம்பித்து அமைதிப் பேரணி வயாவிளான் இராணுவக் குடியிருப்பு நுழைவாயிலை சென்றடைந்தது.

இதன் போது இப்பேரணியில் கலந்து கொண்ட மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அங்கு வந்த யாழ் மாவட்ட இராணுவத்தளபதியுடன் கலந்துரையாடிய பின்னர் இராணுவ தளபதி வழங்கிய வாக்குறுதியை அடுத்து போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -