க.கிஷாந்தன்-
அட்டன் பிரதேத்தில் மூன்று நாட்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யமுடியுமென எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், நோர்வூட், மஸ்கெலியா நகர பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விநியோகிக்கும் வகையில் பெற்றோல் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் நுவரெலியா மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தடையின்றி விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றதாக கூறியுள்ளனர்