நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் அதிகரித்தமைக்கு, கொண்டாட்டங்கள்



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் , க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை அதிகரிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியமைக்கு ஆதரவு தெரிவித்து மலையக நகரங்களில் 02.11.2017 மாலை 3.00 மணியளவில் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் அட்டன் மற்றும் பொகவந்தலாவை நகரங்களில் ஒன்றுகூடி பாற்சோறு சமைத்து பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி ஆராவாரங்களில் ஈடுபட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபை மூன்றாக பிரிக்கப்பட்டு மஸ்கெலியா, நோர்வூட், அம்பகமுவ பிரதேச சபைகளாகவும் நுவரெலியா பிரதேச சபை மூன்றாக பிரிக்கப்பட்டு நுவரெலியா, கொட்டகலை, அக்கரப்பத்தனை ஆகிய பிரதேச சபைகள் அதிகரிக்கபட்டமைக்கு ஆதரவு தெரிவித்தே 02.11.2017 அன்று இந்த மகிழ்ச்சி ஆராவாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த மகிழ்ச்சி ஆராவாரத்துக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -