நாட்டின் ஜனாதிபதிகள் பாவித்த அதிபாதுகாப்பு 25 மோட்டார் வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிக்கத் தீர்மானம்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு கருதிக், கடந்த 40 வருடங்களுள் நாட்டின் ஜனாதிபதிகளின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட குண்டுதுளைக்காத 25 மோட்டார் வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Mercedes Benz மற்றும் Jaguar வகை விலையுயர்ந்த இந்த மோட்டார் வாகனங்களில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மானுக்குக் கொண்டுவரப்பட்ட Toyota Land வாகனமும் உள்ளடங்குகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜெ.ஆர். ஜெயவர்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் குறித்த வாகனங்கள் பாவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிப்பதற்கான பொறுப்பு கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளைக் குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தொடர்பாடல் மற்றும் பிற உபகரணங்கள் கழட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுதுளைக்காத இந்த வாகனங்களை ஏலத்தில் விட்டால், பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்கள் அதனைக் கொள்வனவு செய்யச் சந்தர்ப்பம் காணப்படுவதால், இவ்வாறு ஆழ் கடலில் மூழ்கடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பல வருடங்கள் பழமைவாய்ந்த இந்த வாகனங்களைப் பழுது பார்ப்பதற்கு அதிக செலவாகவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -