உதவும் கரங்கள் அமைப்பின் கல்வி வளர்ச்சிக்கு கை கொடுப்போம் நிகழ்வு!!!



எம்.வை.அமீர்-

ல்வேறு சமூக நலத்திட்டங்களில் ஈடுபட்டு வரும் உதவும் கரங்கள் அமைப்பின் மூன்றாண்டுகள் நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் 2017-12-22 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி வளர்ச்சிக்கு கை கொடுப்போம் எனும் நிகழ்வு நிகழ்வு அவ் அமைப்பின் தலைவர் எஸ்.ரி.யாஸீர் அகமட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாலின் தலைவர் வை.எம்.ஹனிபாவும் அதிதியாக கல்முனை கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரும் விஷேட அதிதியாக அமைப்பின் ஆலோசகரும் வங்கி முகாமையாளருமான ஏ.எல்.அன்வர்டீனும் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.

அமைப்பின் செயலாளர் கே.எம்.சஜாத்தின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எல்லா சமூகங்களையும் சேர்ந்த 50 தேவையுடைய மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சாய்ந்தமருது பேமிலி சொய்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் நாட்டின் நாலாபக்கங்களிலும் உள்ள ஊழியர்களே குறித்த அமைப்பின் அங்கத்தினராக இருப்பது முன்மாதரியான விடயமாகும்.


















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -