நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்ககிந்தோட்டை விவகாரம் தொடர்பில் கடுந் தொணியில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குபதில் வழங்கிய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, அங்குபொலிஸாரும் முப்படையினரும் பொறுப்புடன் செயற்பட்டதாகவும் எந்தசந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு மீளப்பெறப்படவில்லை என கூறியிருந்தார்.
கிந்தோட்டையில் முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் தாக்குதல்களுக்கு பாதுகாப்புபடையினர் அனுமதி வழங்கியதையும் அவர்களே முன்னின்று செய்ததையும் அந்த பகுதிமக்கள் கண்ணுற்றதாக சாட்சியம் கூறுகின்றனர். பொலிஸ் மா அதிபர் கூட பாதுகாப்புபடையினர் பாதுகாப்பை நிலைநாட்ட தவறிவிட்டதாக ஏற்றுக்கொண்டுள்ளார். அரசுக்குசார்பான முஜீபுர் ரஹ்மான் மற்றும் அஸாத்சாலி போன்றவர்கள் கூட கிந்தோட்டையில்பாதுகாப்பு மீளபெறப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் சட்டம்மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலுள்ளவாறு பதிலளித்துள்ளதானதுமுழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயற்பாடாகும்.
இப்படி நாகூசால் பொய் சொல்வது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.சில மாதங்கள் முன்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளுத்கமைக்கு நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டதாக கூறி பலத்த கண்டனத்தை பெற்றிருந்தார். ஒருவர் தங்களதுபிழைகளை ஏற்றுக்கொண்டால், அடுத்த முறை இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது அதனை தடுக்க முயல்வார். அவ்வாறில்லாது பொய்களை கொண்டு பூசிமெழுகுபவர்கள், இதன் பின்னர் ஏதாவது சம்பவங்கள் இடம்பெறும் போது வேடிக்கைதான் பார்ப்பார்கள். இவர்கள் தொடர்பில் முஸ்லிம்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும்.
அ அஹமட்
ஊடக செயலாளர்
முஸ்லிம் முற்போக்கு முன்னனி ..