க.கிஷாந்தன்-
கல்வி அமைச்சின் அழகியல் பிரிவுடன் இணைந்து அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி இசை மாணவர் ஒன்றியம் பெருமையுடன் வழங்கும் மார்கழி மகா இசை உற்சவமும், தியாகராஜர் ஆராதனையும் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன் தலைமையில் 29.12.2017 அன்று மாலை 4 மணியளவில் அட்டன் சாரதா மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி காரியாலயத்தின் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திரசிங், மத்திய மாகாண உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி. வை.எம்.எம்.கே.யாப்பா (அழகியல்), யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் தவநாதன் றொபேட் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது இசை நிகழ்ச்சியும், ஆராதனையும் இடம்பெற்றது. அத்தோடு 30.12.2017 அன்றும், 31.12.2017 அன்றும் இந்நிகழ்வுகள் மாலை 4 மணியளவில் தொடர்ந்து இடம்பெறும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.