பூண்டுலோயா கைப்புகலை பகுதியில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்து - சாரதி பலி





க.கிஷாந்தன்-

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்று 13.12.2017 அன்று பூண்டுலோயா கைப்புகலை பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து 13.12.2017 அன்று காலை 8.00 மணியளவில் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் பூண்டுலோயா கைப்புகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மோட்டர் சைக்கிளில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், மோட்டர் சைக்கிள் பிரதான வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளையில் அவ்வழியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கண்டு குறித்த நபரை கொத்மலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் பூண்டுலோயா நகரப்பகுதியை சேர்ந்த கே.வி.ஜீ. அஜந்த குமார இந்துநில் (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ப+ண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -