தனிக் கட்சி அமைத்து தமிழகத்தைக் கைப்பற்ற தயாரானார் நடிகர் ரஜனிகாந்த்

ரஹ்மான் அப்துல் அஸீஸ்-

ருவாரா, வர மாட்டாரா என பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்குவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னையில்  நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு நாட்களாக தனது இரசிகர்களுடன் நடத்திவந்த ஆலோசனையின் பின் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ரஜினிகாந்த், எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமிழகத்தின் ஒட்டுமொத்த 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தனக்குத் தொண்டர்கள் யாரும் தேவையில்லை என்றும் நாட்டைக் காக்கும் காவலர்கள் மட்டுமே வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த அறிவிப்பை உலகெங்கும் உள்ள அவரது இரசிகப் பெருமக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -