வெளிநாடுகளுக்கு வேலைவாய்புக்காகச் செல்லும் அனைவருக்கும் ஆங்கில மொழி அவசியம்-அத்துகோரல

லங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் அனைத்து பணியாளர்களுக்கும் ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான தகவலை நீதி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை பணியாளர்களுக்கு கூடுதல் பெறுமதி சேர்ப்பதற்காக ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அதன் ஊடாக பணியாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளுக்கு மேலும் பல இலங்கை பணியாளர்களை அனுப்பி வைக்கப்படவுள்ளன. 
அதன் ஊடாக நாட்டுக்கு பாரியளளவிலான அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -