தேர்தல் வன்­மு­றைகளைத் தவிர்க்க பேர­ணி­களைத் தடுக்கும் பொலிசாரின் கடும் நட­வ­டிக்­கை­

நாட­ளா­விய ரீதியில் நேற்று முதல் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் கட்­டளை சட்டம் அமு­லுக்கு வரும் நிலையில் பேர­ணி­களை தடுக்க கடும் நட­வ­டிக்­கை­களை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர். குறிப்­பாக கடந்த தேர்­தல்­களின் போது இடம்­பெற்ற தேர்தல் வன்­மு­றைகள் பல பேர­ணிகள் ஊடாக ஆரம்­பித்­துள்­ள­மையை அவ­தா­னித்­துள்ள பொலிஸார் இம்­முறை தேர்­தலில் பேர­ணிகள் தொடர்பில் தடுக்க கடும் நட­வ­டிக்­கைக்கு திட்­ட­மிட்­டுள்­ளனர்.

அதன்­படி தேர்­தல்கள் சட்டம் நாட­ளா­விய ரீதியில் நேற்று முதல் அமு­லுக்கு வந்­ததால் பேர­ணிகள் அனைத்தும் தடை செய்­யப்­ப­டு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

பிர­தே­சங்­க­ளுக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்கள், பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்கு பேர­ணிகள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்கும் பொறுப்பு அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­க­ளுக்கும் அதனை மேற்­பார்வை செய்து வழி நடத்தும் நேரடி கட­மைகள் தொடர்­பி­லான ஆலோ­ச­னைகள் வழங்கப்பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று நண்­பகல் இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இதன்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தேர்தல் காலப்­ப­கு­தியில் வன்­மு­றைகள் அதிகம் இடம்­பெற இந்த பேர­ணிகள் காரணம் என்­பதை நாம் அடை­யாளம் கண்­டுள்ளோம். தேர்­தல்கள் சட்ட திட்­டங்­களின் பிர­காரம் வேட்பு மனு தாக்கல் செய்­ய­ப் படும் தினத்தில் இருந்து தேர்­தல்கள் நிறை­வுற்று பிர­க­டனம் செய்­யப்­படும் தினம் வரை பேர­ணிகள், ஊர்­வ­லங்கள் செல்ல முடி­யாது. மத, கலா­சார பேர­ணி­க­ளுக்கு அனு­மதி உள்ள போதும் அவை கூட தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­ப­டு­மாயின் அதற்கும் அனு­ம­தி­யில்லை.

இம்­முறை பேர­ணி­களை கட்­டுப்­ப­டுத்த அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் நாம் எழுத்து மூல உத்­த­ர­வு­களை வழங்­கி­யுள்ளோம். பேர­ணி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கவும் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­தவும் பிர­தே­சங்­களின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்­களுக்கும் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்கும் பொறுப்புச் சாட்­டப்­பட்­டுள்­ளது.

ஏதேனும் ஒரு பகு­தியில் பேர­ணிகள் இடம்­பெ­று­மாயின் அது தொடர்பில் 24 மணி நேரத்­துக்குள் பொலிஸ் நிர்­வாகம் மற்றும் தேர்­தல்கள் கட­மை­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்­ர­ம­ரத்­ன­வுக்கு அறி­விக்க வேண்டும் என பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் அதே 24 மணி நேரத்­துக்குள் மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பான அந்­தந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­னதை உறுதி செய்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடா­கவும் தேர்­தல்கள் கட­மை­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்­ர­ம­ரத்­ன­வுக்கு அறி­விக்க வேண்டும் என பொலிஸ் தலை­மை­யகம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இந் நிலையில் அவ்­வாறு ஆரம்­பிக்­கப்­படும் விசா­ர­ணை­களின் நிலை­மை­யையும் 7 நாட்­க­ளுக்கு ஒரு முறை மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமரத்னவுக்கு அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எனவே இம்முறை தேர்தல் சட்டதிட்டங்களை மீறி பேரணிகள் செல்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -