எனை நீ பிரியாதே...........!

Indran Manges-

ன் மூச்சுக்காற்றில் இருந்து
மௌன இராகம் இசைத்து
நாடிநரம்புகள் புடைக்க
நாட்டியமாடும் உன்னை
பிரிந்து செல்ல முடியவில்லை.
நினைவுகளெல்லாமே நீயாகி
உனக்குள் நானும்
எனக்குள் நீயுமாய்
இணைந்த உன்னை
இனியும் பிரியமனமில்லை.

எதிலும் எங்கும்
என்னோடு இணைந்த
இரும்புச்சங்கிலியாய்
இதயத்தில் நீ
இருப்புக்கொண்டுவிட்டு
ஏனிப்போது நீ
இதயத்தை வதைக்கிறாய்
உயிரோடு உயிராய்
உறவுகொண்டு
உணர்வுகளில் உலாவரும்
உன்னை ஒருநிமுடம்கூட
பிரிந்திடவே முடியவில்லை
பிரிந்திடாதே
பட்டமரமாய் நான்
பாழடைந்து போவேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -