அஷ்ரப் ஏ சமத்-
சர்வதேச பளு துாக்கும் போட்டியில் ( An international Black Lion of Asia ) தங்கப்பதக்கத்தைப் பெற்ற இலங்கைக்கு பெருமை தேடித்தந்த ஜாஎலயைச் சோ்ந்த லுசன் அன்டன் புஸ்பராஜ்க்கு தான் வாழ்வதற்காக வீடொன்றினை வழங்குமாறு வீடமைப்பு நிர்மாண்த்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதற்கமைவாக அவரை இன்று( 21) அமைச்சுக்கு அழைத்து மொரட்டுவையில் உள்ள அங்குலானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடாமாடி வீடொன்றினை இலவசமாக அமைச்சா் வழங்கி வைத்தாா் இவ் வீடு 42 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்தது. இவ் வைபவத்தில் வீடமைப்பு அமைச்சின் செயலாளா் ஆர்.எம். அபேரத்தினவும் கலந்து கொண்டாா்.