நாட்டின் பாதுகாபபு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்காலிகமாக நடவடிக்கை கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின்பெர்ணான்டோ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் முதலான சமூக வலைதளங்களை அணுகுவதற்கான வசதிகள் தற்காலிகமான முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
அனைத்து சமூக ஊடகங்களும் முழுமையாக முடக்கப்படவில்லை பொது மக்களின் நலன்கருதியே அரசாங்கம் செயல்பட்டுவருகிறது என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -