ஶ்ரீலசுக வின் 12 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு


ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தாலும் அவர்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக செயல்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சுசந்த புஞ்சி நிலமே, டப்ளியூ.டி.ஜே செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாபா, சுதர்ஷனி பிரனாந்து பிள்ளை, எஸ்.பீ திஸாநாயக்க, டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, அனுராத ஜயரத்ன மற்றும் லக்ஸ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -