உயர் கல்விக்கான ஒன்றியத்தின் (AAE) வினாவிடை போட்டி இறுதிச்சுற்றும் பரிசளிப்பு நிகழ்வும் : கல்முனை உவெஸ் லி வெற்றி!

காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்ட தமிழ் மாணவர் உயர் கல்விக்கான ஒன்றியத்தால் (AAE) நடாத்தப்பட்ட இவ்வாண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான வினாவிடைப் போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை வெற்றிபெற்றுள்ளது.
இச்சுற்றுப்போட்டி நேற்று (10 ) கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் கிளனி மண்டபத்தில் நடைபெற்றது.
வினாவிடைப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு திருக்கோவில் விநாயகபுரம் மகாவித்தியாலய அணியும், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை அணியும், கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அணியும், விபுலானந்தா மத்திய கல்லூரி அணியும் போட்டியிட்டிருந்தன.

இதில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை, திருக்கோவில் விநாயகபுரம் மகாவித்தியாலயம் அணிகளுக்கிடையிலான இறுதிச்சுற்று போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் நேற்று (10 ) கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் கிளனி மண்டபத்தில் நடைபெற்றது.
போட்டிக்கு நடுவர்களாக இரசாயனவியல் ஆசிரியை திருமதி.சுரேஷ்குமாரிசுதர்சன் , பௌதிகவியல் ஆசிரியர் .தெய்வீகன் ஆகியோர் கடமையாற்ற அதிதிகள், ஆசிரியர்கள், மற்றும் மருத்துவ பொறியியல் பீட சிரேஷ்ட மாணவர்கள் முன்னிலையில் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இறுதிச்சுற்றுப் போட்டியில் உவெஸ்லி உயர்தரப் பாடசாலை வெற்றி பெற்று சம்பியனானது.
வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்ட்டன.
இந் நிகழ்வில் அதிதிகளாகவைததியகலாநிதி டாக்டர் சித்ரா தேவராஜன் ,கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ். சந்தியாகு , உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர்வி.பிரபாகரன்,விநாயகபுரம் மகா வித்தியாலய அதிபர் அன்ரன் ஆகியோரும் மற்றும் கல்முனை தமிழ் ஒன்றியத்தின் சார்பில் சிவதர்ஷன்,கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை.தலைவர்பிரதீபன், செயலாளர் நிதான்சன், மற்றும் ஆசிரியர்கள், மருத்துவ பொறியியல் பீட சிரேஷ்ட்ட மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்
இவ்வமைப்பானது 2012 ஆம் ஆண்டு உயர்தரப்பரிட்சையில் மருத்துவ பொறியியல் பீடத்திற்கு தெரிவான தமிழ் மாணவர்களின் அயராத முயற்சியினாலும், அர்ப்பணிப்பினாலும் வருங்கால கல்விச்சமூகத்தின் கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் பின்தங்கியுள்ள மாவட்ட தமிழ் மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரித்து பல்கலைக்கழக அனுமதி பெறும் தமிழ் பேசும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் நோக்கோடு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ,உவெஸ்லி உயர்தரப்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உயர் கல்விக்கான ஒன்றியம்(AAE) வினாவிடைப் போட்டிகள் மாத்திரமின்றி, செயலமர்வுகள், முன்னோடிப்பரீட்சைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள், போன்ற கல்வி ஊக்குவிப்பு செயற்பாடுகளை கடந்த ஆறு வருடங்களாக முன்னெடுத்துவருகின்றது கல்விச்சமூகத்தால் வரவேற்கப்படுகிறது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -