கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்- இம்ரான் எம்.பி


ட்சியின் முழுமையான மறுசீரமைப்பே தமது எதிர்பார்ப்பு என ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். திருகோணமலையில் இருந்து சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடன் செவ்வாய்கிழமை காலை கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாளை நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பில் பிரதமர் இலகுவாக வெற்றிகொள்வார். இது ஊடகங்களினாலயே பெரிதாக காட்டப்படுகிறது. ஆனால் இப்போதுள்ள பிரட்சினை எமது கட்சிக்குள் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பே.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் எமது கட்சி ஆதரவாளர்களை கட்சி திருப்திபடுத்தவில்லை. கட்சி ஆதரவாளர்கள் உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்றும் அதிருப்தியுடனையே உள்ளனர். கட்சியின் அதிகாரம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் குவிந்து காணப்படுவதே இதற்கான காரணமாகும்.
மஹிந்த ராஜபக்ச எப்படி ஆட்சி நடாத்தினாலும் அவர் தமது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை திருப்திபடுத்தினார். ஆனால் நாட்டின் கடனை அடிக்கிறோம், பொருளாதாரத்தை கட்டி எழுப்புகிறோம் என கூறி எமது அமைச்சர்கள் கட்சியை கவனிக்க தவறிவிட்டனர்.
அமைச்சர்கள் ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் வழங்கும் போது நூறு வேலை வாய்பை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்பது நியாயமானதே. ஆனால் அவ்வாறு இல்லை என்பதே இப்போதுள்ள பிரட்சினை ஆகும்.

ஆகவே இந்த பிரட்சினைகள் தொடர்பாக பிரதமரிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் கட்சி முழுவதுமாக மறுசீரமைக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். அவ்வாறு இல்லாவிடின் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கவும் 2020இல் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாக்கவும் பாரிய போராட்டம் ஒன்றை கட்சிக்குள் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -