கொட்டகலையில் சீத்தா பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

க.கிஷாந்தன்-
கொட்டகலை பிரதேச பகுதியில் சீத்தா பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 12.04.2018 அன்று கொட்டகலை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்தின் வழிகாட்டலின் கீழ் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து பழமரச் செய்கையினை ஊக்குவிக்கும் வேலைத்திட்டதின் கீழ் இந்த பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த பழக்கன்றுகளை பயிரிடும் முறை பற்றி செயன்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன் போது, பிரதி தவிசாளர் எம்.ஜெயகாந்த், ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சரின் பிரத்யேக செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் இ.தொ.காவின் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -