கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!!!


டந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று (11) அரசாங்கத்தால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பதாவிட்டால் அவர்கள் பணியில் இருந்து சுயமாக விலகிச் சென்றவர்களாக கருதப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று குறிப்பிட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து தமது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்ததாக அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -