முஸ்லிம் ஒருவர் உபதலைவராக வருவதற்கு எதிராக வாக்களித்து ஐக்கிய தேசிய கட்சி இன்னும் ஒரு துரோகம் இழைத்துவிட்டது..


பேருவளை பிரதேச சபையில் முஸ்லிம் ஒருவர் உப தலைவராக வருவதற்கு சிறி லங்காபொதுஜன பெரமுன அணியினர் ஆதரவு வழங்கிய போதும், ஐ.தே.கவானது எதிர்ப்புதெரிவித்ததன் மூலம், அதற்கான சந்தர்ப்பத்தை இல்லாதொழித்து, முஸ்லிம்களின் பரமவிரோதி என்பதை நிரூபித்துள்ளதாக பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர்இபாஸ் நபுகான் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

பேருவளை பிரதேச சபையில் சிறி லங்கா பொதுஜன பெரமுன 20 ஆசனங்களையும்,ஏனைய கட்சிகள் அனைத்தும் 20 ஆசனங்களையும் பெற்றிருந்தன. தவிசாளர் தெரிவின்போது சிறி லங்கா பொதுஜன பெரமுனவுக்கு, சுதந்திர கட்சி ஆதரவளித்ததன் மூலம், அக்கட்சியை சேர்ந்த ஒருவர் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
உப தவிசாளர் தெரிவின் போது, சிறி லங்கா பொதுஜன பெரமுனவானது சு.காவைச்சேர்ந்த ஒரு முஸ்லிமின் பெயரை முன் மொழிந்திருந்தது. இவர்கள் 20 பேரில் 15 பேர்ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். இதன் போது முஸ்லிம் ஒருவர் உப தலைவராகவரக் கூடாது என்பதற்காக, ஐ.தே.கவினர் சிறி லங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தஒருவரின் பெயரை முன்மொழிந்து ,குழப்பியிருந்தனர்.
அவர்கள் தங்களது கட்சியை சேர்ந்த யாரையாவது முன் மொழிந்திருக்கலாம். அதுநியாயமானது. அவர்களேசிறி லங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரின் பெயரைமுன்மொழிந்துள்ளமையானது, ஏதோ ஒன்றை நோக்காக கொண்டதென்பதைஅறிந்துகொள்ளச் செய்கிறது. தங்களது கட்சியை சேர்ந்த ஒருவரின் பெயரை முன்மொழிந்தால், அது நிச்சயம் தோல்வியை தழுவும்.

சிறி லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஒருவரின் பெயர் முன்மொழியப்படும்போது, நிச்சயம் அக் கட்சியில் உள்ள சிலர் அவருக்கு ஆதரவு வழங்குவர். முஸ்லிம்ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்பு இல்லாமலாக்கப்படும். பேருவளை பிரதேச சபைக்குமுஸ்லிம் உப தலைவர் ஒருவர் தெரிவானால், அது ஐ.தே.கவின் முஸ்லிம் வாக்குவங்கியில் சரிவை ஏற்படுத்தும். முஸ்லிம் ஒருவரை உப தலைவராகாமல் தடுப்பதன்மூலம், தொடர்ந்தும் தங்களது கட்சிக்கு முஸ்லிம் ஆதரவை பெற முடியும்.

இவர்களது இந்த குறுகிய சிந்தனைகளை முஸ்லிம்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.எப்போதும் ஐ.தே.கவினர் முஸ்லிகளை கறிவேப்பிலையாகவும், வாக்களிக்கும்இயந்திரங்களாகவுமே பயன்படுத்துகின்றனர். முஸ்லிம்களுக்கு ஏதேனும் நல்லதுநடந்தால் பிடிக்காது. ஐ.தே.கவினரின் இவ்வாறான கீழ்த்தரமான சிந்தனைகளை அறிந்து,முஸ்லிம்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -