நாளை திருக்கோவிலில் கொடித்தம்பம் நடல் வைபவம்! ஊர்வலம்: சமயசடங்குகளுடன் நடப்படுமென்கிறார் தலைவர் சுரேஸ்!

காரைதீவு நிருபர் சகா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் புதிய கொடித்தம்பம் நடல் வைபவம் நாளை(06) வெள்ளிக்கிழமை ஊர்வலம் மற்றும் சமயசடங்குகளுடன் நடைபெறவுள்ளது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் சமயகிரியைகளுடன் இக்கொடித்தம்பம் நடல் வைபவம் நாளைகாலை ஆரம்பமாகவுள்ளது.
நாளைகாலை கொடித்தம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பிற்பகல் 2மணி முதல் 3மணிவரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் கொடித்தம்பம் ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் நடப்படுமென்று ஆலயபரிபாலனசபைச் செயலாளர் ஏ.செல்வராஜா தெரிவித்தார்.
காட்டிலிருந்துகொண்டுவரப்பட்ட 26அடி உயரமுடைய 2அடி விட்டமுடைய நாகமரத்திலான இக்கொடிமரம் மற்றும் அதன்அமைப்புவேலைகளை களுவாஞ்சிக்குடி லாவண்யா நகைமாட உரிமையாளர் கே.பாக்கியராஜா உபயகாரராக பொறுப்பேற்று நடாத்துகின்றார். இதற்கென சுமார் 15லட்சருபா செலவாகின்றது.
அண்மையில் ஆலயத்தலைவர் சு.சுரேஸ் தலைமையிலான பரிபாலனசபையினர் விடுத்த வேண்டுகோளை யேற்ற திரு.பாக்கியராஜா கொடிமரத்தின்கீழுள்ள மண்டப மாபிள் வேலைகளையும் பொறுப்பேற்றுள்னார்.
15ஆண்டுகளுக்குப்பிற்பாடு எதிர்வரும் ஜூன்மாதம் 25ஆம் திகதி புனராவர்த்தன மகா கும்பாபிசேகம் நடைபெறவிருப்பது தெரிந்ததே. அதனையொட்டி ஆலயம் புதுப்பொலிவுபெற்று வருகின்றது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -