பிரேரணையையை வாபஸ் வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக்!!!


2018 மார்ச் வெள்ளிக்கிழமை 30ம் திகதி தினகரன் பத்திரிகையின் 21ஆம் பக்கத்தில் பிரசுரமான பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் சம்மந்தமான விளம்பரம் தொடர்பாக
னுராதபுர பாராளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மான் ஆகிய என்னை சிலர் அணுகி இலங்கையில் இயங்கும் கலாநிலையம் ஒன்றை பாராளுமன்றத்தில் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் ஒன்றை பிரேரிக்கும் படியும் அதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் படியும் வேண்டிக்கொண்டனர். சமூகத்தில் உள்ள கலா நிலையங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எனது நல்லெண்ணத்தில் தான் அவ்வாறு செய்தேன் .அதற்கு இணங்க பாராளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.


பத்திரிகையில் அது சம்பந்தமான விளம்பரம் ஒன்று எனது பெயரில் பிரசுரிக்கப்பட்ட பின்னர் சமூக வலைத்தலங்களிலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.எனவே உலமாக்களிற் சிலரும் சில புத்தி ஜீவிகளும் என்னுடன் தொடர்பு கொண்டு எனக்கு தெளிவு படுத்தியதன் பின்னர் நான் அவசரப்பட்டு எடுத்த பொருத்தமற்ற முடிவு அது என்பதை அறிந்து கொண்டேன். எனவே,சபாநாயகருடன் தொடர்பு கொண்டு பிரேரணையையை வாபஸ் வாங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.


இதன் பின்னர் என்னிடம் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு ஆவணத்தையும் முன்னரை விட மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை நான் அறிந்து கொண்டேன்.இது சம்பந்தமாக என்னை தெளிவு படுத்திய உலமாக்களுக்கும்,புத்தி ஜீவிகளுக்கும்,மற்றும் ஏனைய சகோதரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படிக்கு,
இஸ்ஹாக் ரஹுமான்,
பாராளுமன்ற உறுப்பினர்,
அனுராதபுரம் மாவட்டம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -