மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் பைஸர் முஸ்தபா நியமனம்!!!


பைஷல் இஸ்மாயில், றியாஸ் இஸ்மாயில்-
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் விளையாட்டுத் துறை அமைச்சராக சிரேஷ்ட சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று (12.04.2018) நியமனம் செய்யப்பட்டார்.

முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த தயாசிறி ஜயசேகர நேற்று தனது அமைச்சுப்பதவியை இராஜினாமச் செய்திருந்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை சிறந்த முறையில் செயற்படுத்தி வருவதன் காரணமாக ஜனாதிபதியினால் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சையும்
இன்று புறம்பாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு ஜனாதிபதியினால் இன்று இரு அமைச்சுப் பதவிகள் வழங்கியிருப்பதானது இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரையும் கௌரவப்படுத்தியுள்ளதாக புத்துஜீவிகள் இதன்போது தெரிவிப்பதுடன் ஜனாதிபதிக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி
தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -