பிரதமருக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அனைவரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்-இம்ரான் எம்.பி


பிரதமருக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அனைவரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதம் நடைபெற்றுகொண்டிருக்கும் போது பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் குழப்பி நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் தள்ள அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு மஹிந்த ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்த கறுப்பாடுகளே இன்று பிரதமருக்கு எதிராக வாக்களிக்கவுள்ள அரசாங்க உறுப்பினர்களாகும்.

அரசாங்கம் வழங்குகின்ற சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக்கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் இவர்களை உடனடியாக அரசாங்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இவர்கள் தொடர்ந்தும்அரசாங்கத்தில் இருப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது.

ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்க்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதுக்குரிய காலம் இன்றுடன் மலர்ந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -