அவள் ஜனனம்...!
-கவிதாயினி அமுதா பொற்கொடி-
அவள் ஜனனம்...!
காலநதி கடத்தி வந்த
சிறுவித்தாய் அவள் மனம்...
பலகாதம் பாலையில்
பயணித்து ஒதுங்கி....
தூவானமான அவன் அன்பில்
உயிர்த்தது மறுகணம்...
பிளவுபட்ட விதைமுளையில்
இன்ப பூகம்பம்...
அதிர்ந்து உடைந்தது இதய இரும்புவேலிகள்....
தவிடுபொடியானது அவள் பாசாங்கு பசபசப்புகள்....
பட படவென அடித்துத் திறந்த சாளரக்கதவிடை....
மெல்ல விழித்து துளிர்த்த ஈரிலை
பூமியில் தன் ஜனனத்தை சுவாசித்தது...