ஹபரனையில் பஸ் விபத்து நஸீர்ஹாஜி உட்பட ஏறாவூர் பயணிகளுக்கும் காயம்!


ஏ.ஆர்.எம்.றிபாய்-
கொழும்பில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு கல்முனை நோக்கி புறப்பட்ட பஸ் ஒன்று ஹபரனை பகுதியில் சாரதியின் தூக்கம் காரணமாக கம்பம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.

குறித்த காயமடைந்தவர்களுள் ஏறாவூரைச் சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் நஸீர் ஹாஜியார், மற்றும் அவரது மகள் , ஏறாவூர் நகர சபை உப தவிசாளர் ரெபுபாசம் அவர்களின் மகள் உட்பட ஏறாவூர் பயணிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 3.30மணியளவிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் ஹபரனை மற்றும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதுடன் , நஸீர் ஹாஜியார் உட்பட காயமடைந்த ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் ஆரம்ப சிகிச்சையை முடித்துக் கொண்டு தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -